டிசம்பர் 25ஆம் தேதி அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த சதித் திட்டம்

Saturday, January 30, 2010

செல்லப்பிராணிகளுடன் அடக்கம் : பிரிட்டனில் இப்படியும் வினோதம்

பிரிட்டனில் எஜமானர் களையும், அவர்களின் செல்லப் பிராணிகளையும், இறந்த பின் ஒரே இடத்தில் புதைக்கும் வினோதமான நடைமுறை சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

பழங்காலத்தில் எகிப்தில் வசித்தவர்கள், ஒரு விசித்திரமான நடைமுறையை பின்பற்றினர். தாங்கள் இறந்தவுடன், தங்களுக்கு அருகிலேயே, ஆசையாக வளர்த்த செல்லப் பிராணிகளையும் புதைக்கும் நடைமுறை தான் அது.தற்போது, பிரிட்டனில் அந்த நடைமுறை மீண்டும் உயிர் பெற்றுள்ளது. பிரிட்டனில் பூனை, நாய், குதிரை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்போர் மிகவும் அதிகம். இங்கு ஆண்டுதோறும் 15 லட்சம் செல்லப் பிராணிகள் இறக்கின்றன. இவற்றில் பெரும் பாலானவற்றை அவற்றின் எஜமானர்கள் தோட்டங்களில் புதைத்து விடுவர்.



சமீபகாலமாக பெரும்பாலான எஜமானர்கள், தாங்கள் இறந்து விட்டால், அதே இடத்திலேயே, தாங்கள் ஆசையாக வளர்க்கும் செல்லப் பிராணிகளையும் புதைக்க வேண்டும் என, விரும்புகின்றனர். இதற்கென, பிரிட்டனில் பிரத்யேகமான மயானங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தி, முன் கூட்டியே பதிவு செய்துவிட்டால், அதற்கான ஏற்பாடுகளை, மயான பராமரிப்பாளர்களே செய்து விடுவர்.

இதன்படி, எஜமானர் இறந்த சில காலம் கழித்து, அவரின் செல்லப் பிராணி இறந்து விட்டால்,அவரை புதைத்த இடத்திலேயே செல்லப் பிராணியும் புதைக்கப்படும்.

இதற்கான பிரத்யேகமான மயானத்தை பராமரித்து வரும் பென்னி லல்லி என்பவர் கூறுகையில்,"செல்லப் பிராணி களையும், அவற்றின் எஜமானர் களையும் ஒரே இடத்தில் புதைக் கும் வசதியுடைய மயானத்தை 2003ல் துவங்கினேன். இதுவரை ஏராளமானோர், தங்களது செல்லப் பிராணி களுக்கு அருகில் புதைக்கப் பட்டுள்ளனர். மேலும், பலர் முன் பதிவு செய்துள்ளனர்' என்றார்



Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl